இன்றும் கந்தல் துணியில் மானம் காக்கும்
கடைக்கோடி நம் மக்கள் ...
இன்றும் உழவும் உலவும் நாட்டினிலே
உழவை மறக்கும் நம் மக்கள்...
இன்றும் ஒரு கை அண்ணம் பாராமல்
சாவை நோக்கும் நம் மக்கள்...
இன்றும் ஊழல் பெருத்த சமூகத்தில்
உறக்கம் தொலைக்கும் நம் மக்கள்...
இன்றும் பிளாட்பாரம் , சாக்கடையில்
கொசுக்களுக்கு தீனியாய் நம் மக்கள்...
இன்றும் குடியைக் கெடுக்கும் குடியால்
உயிரை வெறுக்கும் நம் மக்கள்...
இன்றும் கல்வி வெறும் காட்சிப் பொருளாய்
தூரத்தில் தொலைந்த நம் மக்கள்...
இன்றும் ஆட்சிகள் மாறினாலும்
அவலங்கள் மாறாத நம் மக்கள்...
இன்று படித்தாலும் வேலையில்லை படிப்பதற்கும்
வழியில்லை, பரிதவிப்பில் நம் மக்கள்...
இனி எல்லாம் தனியார் மயமாய், அரசை நம்பி
மோசம் போகும் நம் மக்கள்...
இன்றும் என்றும் ஆட்சிகள் மாறினாலும், அரசை ஆளா
சிந்தை மலிந்த நம் மக்கள்...
பிறகெப்படி இந்தியா வல்லரசாகும் ??!...
புதிய தேசம் கண்டிடுவோம்
புதிதாய் வாழ முற்படுவோம்...
உங்கள் செல்வநாயகம்
1 கருத்து:
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
http://erodetamizh.blogspot.com
கருத்துரையிடுக