கால்வயிறு கஞ்சியில்லை
கண்ணுறங்க கணமுமில்லை!
நடந்துசெல்ல பாதையில்லை
நடைபயில தெம்புமில்லை!
என்னமோ சொல்கிறார்கள்
காதில் எதுவும் ஏறவில்லை!
கொஞ்சம் உற்றுபார்த்தாலும்
என்னவென்று தெரியவில்லை!
வேளாவேளை நடக்கிறது
மனம் வெயில்பட்ட புழுவாய்!
மழையென்ன பனியென்ன
இந்த தோலு செத்துபோச்சு
என்னத்தசொல்ல!
நாலு எலும்பு நாலுநொடி
இன்னைக்கோ நாளைக்கோ
நாளைவரைக்கும் இருந்தா பரவாயில்லை
நாலுவார்த்தை பேச என் உசிரு?...