திங்கள், 16 ஆகஸ்ட், 2010

ஆஹா! என்ன சுதந்திரம் நம் நாட்டில்!

சுதந்திரத்தினால் வந்த சுதந்திரம்!
 

குண்டு துளைக்கா கூண்டில்
கொடியேற்றும் பாரதப் பிரதமர்
வெறும் வாய்மொழி உரை வீச்சு
தொடரும் காஷ்மீர் வன்முறை
தொடரும் பிரிவினை வாத  வன்முறை
தொடரும் கல்விக் கட்டணக் கொள்ளை
கர்நாடக சுரண்டல் பிரச்சினை
தொடரும் முல்லை பெரியாறு பிரச்சினை
கிடப்பில் கிடக்கும் நதி நீர் இணைப்பு திட்டம்
ஓய்ந்து போன சேது சமுத்திர திட்டம்
இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழல்
விலை போகும் பாரத சட்டம் 
கையூட்டுக்கு கையேந்தும் சிபிஐ(போலீஸ் குரூப்)
போபால் பிரச்சினையில் மானகெட்ட
வெக்கங்கெட்ட இந்திய அரசாங்கம் 

சமீபத்திய காமன்வெல்த் விளையாட்டுப் பிரச்சினை
காயும் வயிறுகள் சாகும் நிலையில்
ஒரு வேலை உணவு வாய்க்கு
எட்டாத விலைவாசி
தேவை இல்லாத
பெரு முதலாளி அரசுச் சலுகைகள்
தொடரும் அரசியல் சலுகைகள் மக்கள் பணத்தில்
தொடரும் அரசியல் குடும்பத் திருட்டு 
தொடரும் கௌரவக் கொலைகள்
தொடரும் அரசியல் கொலைகள்
தொடரும் கந்து வட்டிக் கொடுமைகள்
தொடரும் தீண்டாமை கொடுமைகள்
தீண்டாமை வேண்டாம் பாடப் புத்தகத்தில்
தீண்டாமை வேண்டும் அரசியல் சதுக்கத்தில்
 இன்றும் எத்தனை ஆயிரம் உத்தமபுரங்கள்
நம் பாரதத்தில்...
சாதிகள் ஒழிய வேண்டும்
இது பாரதி கனவு
சாதிவாரி கணக்கெடுப்பு 
இது நம் அரசின் நனவு
தாயாய் மதிக்கும் நம் நாட்டில்
பெண்ணியல் வன்முறை கொடுமைகள்
ஏராளம்....
 

இதுதான் நடக்கிறது நம் பாரதத்தில்...
பழம்பெருமை பாரதத்தின்
புதிய
பெருமையில் வறுமையே மிஞ்சுகிறது
 

சுதந்திரத்தின் பொருள் தெரியுமா நமக்கு?
பெற்றுத் தந்தவர்களே பெற முடியும்
சுதந்திரத்தின் சுவாசத்தை ...

முட்டாள் ஆனா நம் மக்களுக்கு  சுதந்திரம்
இருந்தால் என்ன!... செத்தால் என்ன!?....





வெறும் வார்த்தையால் வேண்டாம் சுதந்திரம்
உண்மையான சுதந்திரத்திற்கு பாடுபடுவோம்...
 

வாழ்க பாரதம்!
வளர்க நாட்டுப்பற்று!  


எண்ணங்கள் தொடரும்.....

உங்கள் செல்வநாயகம்.