வெள்ளி, 30 ஜூலை, 2010

இந்தியா எப்படி வல்லரசாகும் ??!

இன்றும் கந்தல் துணியில் மானம் காக்கும்
கடைக்கோடி நம் மக்கள் ...

இன்றும் உழவும் உலவும் நாட்டினிலே

உழவை மறக்கும் நம் மக்கள்...

இன்றும் ஒரு கை அண்ணம் பாராமல்

சாவை நோக்கும் நம் மக்கள்...

இன்றும் ஊழல் பெருத்த சமூகத்தில்

உறக்கம் தொலைக்கும் நம் மக்கள்...

இன்றும் பிளாட்பாரம் , சாக்கடையில்

கொசுக்களுக்கு தீனியாய் நம் மக்கள்...

இன்றும் குடியைக் கெடுக்கும் குடியால்

உயிரை வெறுக்கும் நம் மக்கள்...

இன்றும் கல்வி வெறும் காட்சிப் பொருளாய்

தூரத்தில் தொலைந்த நம் மக்கள்...

இன்றும் ஆட்சிகள் மாறினாலும்

அவலங்கள் மாறாத நம் மக்கள்...

இன்று படித்தாலும் வேலையில்லை படிப்பதற்கும்

வழியில்லை, பரிதவிப்பில் நம் மக்கள்...

இனி எல்லாம் தனியார் மயமாய், அரசை நம்பி

மோசம் போகும் நம் மக்கள்...

இன்றும் என்றும் ஆட்சிகள் மாறினாலும், அரசை ஆளா

சிந்தை மலிந்த நம் மக்கள்...

பிறகெப்படி இந்தியா வல்லரசாகும் ??!...


புதிய தேசம் கண்டிடுவோம்

புதிதாய் வாழ முற்படுவோம்...


உங்கள் செல்வநாயகம்              

வியாழன், 29 ஜூலை, 2010

மனிதனாய் வாழ மறந்தோமே??!

ஒருமுறை ஜனனம்
ஒருமுறை மரணம்
அதற்குள் எத்தனை பிரிவினைகள்...

சாதி மதம் பேதம் கொண்டு
சாக்கடை நீரின் தெளிவைக் கண்டு
ஆள(நாட்டை) வர்க்கப் போராட்டம் ... 

மனம் மறந்து பணம் தேட
குணம் மாறித் திரிகின்றோம்
வாழும் காலம் அறியாமல்
வீழும்(மண்ணில்) காலம் அறிகின்றோம்...

அகம் ஒருபுறம், புறம் ஒருபுறம்
இரண்டும் நடத்தும் நாடகத்தால்
மனிதன் தினமும் தோற்றுப் போரானே!...

புன்னகை முகம் சிறுநகை செய்ய
உண்மை மறைத்துப் பொய்மை செழிக்க
மண்புகும் உடலுக்கு
என்ன ஆயிரம் ஒப்பனைகள்...

ஆனால்...

வீழத் துடிக்கும் ஒரு நிமிடம்
நெஞ்சம் விம்மிச் சொல்லும் ஒரு சொல்
அட, மனிதனாய் வாழ மறந்தோமே??!...     
உங்கள் செல்வநாயகம்