ஒருமுறை ஜனனம்
ஒருமுறை மரணம்
அதற்குள் எத்தனை பிரிவினைகள்...
சாதி மதம் பேதம் கொண்டு
சாக்கடை நீரின் தெளிவைக் கண்டு
ஆள(நாட்டை) வர்க்கப் போராட்டம் ...
மனம் மறந்து பணம் தேட
குணம் மாறித் திரிகின்றோம்
வாழும் காலம் அறியாமல்
வீழும்(மண்ணில்) காலம் அறிகின்றோம்...
அகம் ஒருபுறம், புறம் ஒருபுறம்
இரண்டும் நடத்தும் நாடகத்தால்
மனிதன் தினமும் தோற்றுப் போரானே!...
புன்னகை முகம் சிறுநகை செய்ய
உண்மை மறைத்துப் பொய்மை செழிக்க
மண்புகும் உடலுக்கு
என்ன ஆயிரம் ஒப்பனைகள்...
ஆனால்...
வீழத் துடிக்கும் ஒரு நிமிடம்
நெஞ்சம் விம்மிச் சொல்லும் ஒரு சொல்
அட, மனிதனாய் வாழ மறந்தோமே??!...
உங்கள் செல்வநாயகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக