சனி, 17 ஜூலை, 2010

என்னங்க மொதல்ல இதப்படிங்க...

உழைக்கும் கருவியெய் மறவாதே !
தினம் தினம் புதுமை வரினும்
மாறாதது பழமை ஒன்றே ...
பழமை புதுமை இரண்டும் ஒன்றே
உழைப்பால் !.......

என்றும் உழைப்பே  முதன்மைப்பட
உழைப்பவர்கள் இன்றும் கஷ்டப்பட....
உண்டு பெருத்த அட்டைப்பூசியாய்
என்றும் பெரு முதலாளிசனம் .....

உழைக்கும் வர்க்கம் உறங்கப்போனால்
உண்டிக்கு வழியில்லை,
உண்மையைச் சொன்னால் ...

விழித்தெழும் உலகப்பெருமுதலாளி சனமே
உழைக்கும் கைகளை மறந்தால் , நாளை
பிழைக்கும் நாதியற்று மடிவாய் ....

ஒருவேளை சோறு எட்டாக்கனியாக ,
வெறும் ஆட்சி, அதிகாரம் இருந்து என்னபயன்...
நீ! வானூர்தியில் பறந்தாலும்
வந்திறங்குவது  எம் உழைக்கும் மண்ணில் தான்...
மறவாதே!......

நாடு (விதையில் இருந்து ) விடுதலை பெற்றும்
விளைய மறுக்கும் ஜனநாயகம் (செடியாய் )
இன்றும் பணநாயகம் ....
ஒரு நொடி நினைப்பீர் , உழைக்கும் மக்களின் துயரங்களை....

வாழ்க உழைக்கும் வர்க்கம்!
வாழ்க உண்மை ஜனநாயகம் !

உள்ளக்குமுறல் : உங்கள் செல்வநாயகம்.     

கருத்துகள் இல்லை: